<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10499178</id><updated>2011-07-29T02:38:52.250+02:00</updated><title type='text'>ஜெர்மனி நினைவலைகள்</title><subtitle type='html'>ஜெர்மனியில் நடக்கின்ற நிகழ்வுகள், மற்றும் எனது இனிய அனுபவங்கள் இங்கு பதிவு காண்கின்றன. எனது மற்றைய வலைப்பூவான Germany in Focus { http://subaonline.log.ag } பகுதியின் தொடர்ச்சி இந்த பதிவகம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>12</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-235665276690141458</id><published>2009-04-14T00:11:00.002+02:00</published><updated>2010-02-02T00:17:05.857+01:00</updated><title type='text'>S.M.S எம்டன் 22-10-1914</title><content type='html'>&lt;span style="color:#ffff99;"&gt;S.M.S எம்டன் 22-10-1914 நூல் விமர்சனம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;நூலாசிரியர் திவாகர் விசாகப்பாட்டினம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூல் விமர்சனம் என்பது நூலை படிக்கின்ற வாசகனுக்கு அளிக்கப்படுகின்ற ஒரு சுதந்திரம் என்று நான் கருதுகிறேன். படிக்கின்ற ஒவ்வொருவரும் ஒரு நூலை பல்வேறு கோணங்களில் காண்பதற்கும் உணர்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. ஒரு நூல் தரும் தாக்கம் என்பது பல்வேறு வகைப்படும். வாசித்து பல நாட்கள் ஆகிய பின்னரும் மனதில் ஏதாவது ஒரு வித தாக்கத்தை ஒரு நூல் அளித்தால் ஒரு வகையில் அதனை எழுதிய நூலாசிரியர் வெற்றி பெற்றவராகின்றார். சிறந்த படைப்புக்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை விமர்சனப் பார்வையோடு அலசி அறிமுகப் படுத்துவது ஒரு வித சமுதாயப் பணியும் கூட. இது நூலை வடிக்கின்ற அந்த சிற்பிக்கு தனது படைப்பு எவ்வகை தாக்கத்தை வாசகர்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றது என்ற ஒரு கணிப்பை நிச்சயமாக வழங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலை படிக்கும் போது அதில் கிடைக்கின்ற புரிதலை விட அதனை ஆய்வு செய்ய வேண்டும் விமர்சனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வாசிக்கும் போது எனது அறிவுப் பாதையும் விசாலமடைவதை நான் உணர்கிறேன். பல நூல்களை நான் வாசிக்கின்றேன். அதில் சில எனது மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கின்றன. நாவல்கள் மட்டுமல்ல, சிறுகதைகள், குறுந்தொடர்கள் சில கவிதைகள் - இவற்றில் அடக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt;நாவல்களில் பல வகை உண்டு. அதில் வரலாற்று உண்மையைக் சிறிது கற்பனையோடு கலந்து வழங்குவதில் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார் திவாகர். இவரது திருமலைத் திருடனை படித்தபோது இவரது முயற்சி சாதாரண ஒன்றல்ல என்ற உண்மை புலப்பட்டது. இப்போது புதிதாக பிறந்துள்ள இவரது வரலாற்று நாவல் "S.M.S எம்டன் 22-10-1914" இந்த அற்புதமான எழுத்தாளரை கொண்டிருப்பதில் தமிழ் எழுத்தாளர் உலகிற்கு பெருமையைச் சேர்த்திருக்கின்றது என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஒரு கதையை எழுதும் போது அன்றாட வாழ்க்கையை சித்தரிப்பதாக கதை போக்கு அமைந்திருந்தால் அதில் நூலாசிரியருக்கு நிறைந்த சுதந்திரம் இருக்கும் - தனது கற்பனையை படைப்பாக மாற்ற! வரலாற்று நாவல் என்னும் போது அதில் இந்த சுதந்திரப் போக்கு இல்லாமல் ஆய்வுக்கு நிச்சயமாக இடமளித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அதை மீறும் போது அது வரலாற்று நாவலாக அல்லாமல் ஒரு கதை என்ற வட்டத்திற்குள் விழுந்து விடும். வரலாற்று நாவல் என்ற அந்தஸ்து கிடைக்காது. இது ஒரு சிக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலுக்கு மேலும் ஒரு சிறப்பு கடலோடி நரசய்யாவின் அணிந்துரை. சிறந்த வரலாற்று நூலாசிரியரை நூலை அலசி அணிந்துரை வழங்க வைத்திருக்கின்றார் திவாகர். அணிந்துரையே இந்த நூலுக்கு சிறந்த ஒரு அறிமுகமாகவும் அமைந்து விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூலை வெவேறு அங்கங்களாகப் பிரித்து சிந்திக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அந்த எண்ணத்தை மனதில் கொண்டு எனது இந்த நூலைப்பற்றிய சிந்தனை ஓட்டத்தை செலுத்தியிருக்கின்றேன். முதலில் என்னை கவர்வது கதை மையக் கருத்தாக எடுத்துக்கொண்டுள்ள கரு.&lt;br /&gt;&lt;br /&gt;இது தற்போதை பல தமிழ் நாவல்களிலிருந்து மாறுபட்ட கரு. நடந்த உண்மைகளோடு கற்பனை கலக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு முக்கிய விஷயங்கள் எடுத்தாளப்பட்டிருகின்றன. ஒன்று S.M.S எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் அந்நாளில் இந்து மகாக் கடலில் ஏற்படுத்திய தாக்கம். மற்றொன்று சைவ பாரம்பரியம் மற்றும் சோழ மன்னனின் பரம்பரை பற்றிய செய்திகள். இரண்டும் எப்படி கலக்கின்றன? அதிலும் 1914ம் ஆண்டு வாக்கில் இது எப்படி ஒரே நேரத்தில் குறிப்பிடப்பட முடியும் என்ற கேள்வியை தகர்த்து கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறார் திவாகர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலில் சில குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. சிதம்பரம் பிள்ளை,கந்தசாமி, ராதை, நோபிள், கமாண்டர் மிக்கே, காப்டன் மூல்லர், தம்பிரான் சுவாமிகள் ஆகியோருக்கு கனமான பாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களோடு மேலும், டி.ஐ.ஜி.லாங்டன், லகுளீசப் பண்டிதர், சிவபாதசேகரராக தன்னை மாற்றிக் கொண்ட இராஜராஜ சோழன், இராஜேந்திரன், மச்சு சிரேட்டியார், தம்பிரான் சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், சிதம்பரம் பிள்ளை, முத்து எனப் பலரது கதாபாத்திரங்களும் இந்நாவலைஆக்கிரமிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் ஆங்காங்கே சரித்திர நிகழ்வுகளின் குறிப்புக்கள் சேர்க்கப்பட்டிருப்பது இந்த நாவலுக்கு வலுவைச் சேர்க்கின்றது. அதே சமயம் வாசகர்களுக்கு எந்தப் பகுதி சரித்திர உண்மை எந்தப் பகுதி கற்பனை என்பதை பிரித்து அறிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும் என்பதும் உறுதியாகின்றது. இந்த நாவலைப் படிக்கின்ற ஒரு வாசகன் நிச்சயமாக மேலும் இது தொடர்பான பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளதால் சிந்தனைக்கும் பொது அறிவுத் தேடலுக்கும் இது ஒரு சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திவாகரின் ஆழமான சைவ சமையப் பற்று இந்த நாவலில் நன்றாகவே வெளிப்படுகின்றது. சைவ பாரம்பரியம், சந்தான குருமார்களின் விபரங்கள், சிற்றம்பல நாடிகளின் சாம்பவ விரத நிகழ்வு அதனோடு ஒட்டிய சித்தர் காட்டு நிகழ்வுகள், கதை மாந்தர்கள் பிரச்சனை என்று வரும் போது சிவனை மனதில் உறுதியாக நினைத்து இறைவன் அருள் வேண்டி நிற்பது போன்ற இடங்களில் தனது பக்தியையும் வெளிக்காடிக் கொள்கின்றார் திவாகர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராதையோடு காதல் கொண்டு அவளை மனதால் பிரியாமல் இருக்கும் சிதம்பரம் நோபிளின் பால் கொள்ளும் சலனம் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கின்றது. கதாசிரியர் இந்த உயர்ந்த பாத்திரத்தின் இந்த செயலை நியாயப்படுத்துகின்றாரோ என்ற நோக்கத்தோடு வாசித்துக் கொண்டு வரும் போது ஒரு கட்டத்தில் இந்த சலனமும் தவறு என்பதை சுட்டிக் காட்டுவதிலும் கதாசிரியர் தவறவில்லை. இது மனதிற்கும் நிறைவாக அமைந்து விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலில் கடல் பயணத்தின் போது சீனன் என்ற ஒரு கதாப்பத்திரமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. கதை முழுக்க இந்த சீனர் சீனராகவே வருகிறாரே தவிர மற்றவர்களுக்கு உள்ளது போல இவருக்கு ஒரு பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனை தவிர்த்து இவருக்கும் ஒரு பெயரை வைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் ஜெர்மானிய வார்த்தைகளின் கலப்பு கதையோடு சேர்ந்து வருவதும் ஒருவித அன்னியப்போக்கை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக " டாக்டர்.. நிச்சயமாக டங்கே சொல்ல வேண்டும்" என்பது போன்ற இடங்களில் வற்புறுத்தி மொழிக் கலப்பு செய்யப்பட்டுள்ளது போன்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனாலும் இது ஒரு பெரிய குற்றம் அல்ல. எப்படி நமது அன்றாட தமிழ் பேச்சு மொழி பயன்பாட்டில் ஆங்கிலம் கலந்த தமிழ், மலாய் கலந்த தமிழ் என்று வருகின்றதோ அதே போல இது ஜெர்மன்(டோய்ச்) மொழி கலந்த ஒரு தமிழ். இது எனக்குப் புதிதுமல்ல. ஜெர்மனியில் இரண்டாவது தலைமுறைத் தமிழர்கள் இப்படித்தானே தமிழை பேசி வருகின்றனர்! இந்த ஜெர்மன் மொழி அதாவது டோய்ச் மொழி கலந்த தமிழ் ஒரு வகையில் ஜெர்மனியில் தமிழ் மக்களிடையேயான பேச்சு வழக்கில் அன்னியமற்றதாகி விட்ட நிலையில் இதனை நூலிலும் கலந்து பார்ப்பதில் இது ஒரு பெரிய குற்றமாக என்ணத்தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நூலில் மேலும் ஒரு சிறப்பு இருக்கின்றது. கேப்டன் மூல்லர், மிக்கே மற்றும் ஜெர்மானிய வீரர்களின் பழக்க வழக்கங்களை விவரிக்கும் அழகு என்னை மிக்கவும் ஆச்சரியப்படுத்தியது. நான் அனுபவத்தில் வியந்து போற்றும் ஜெர்மானியர்களின் சில சிறப்பான பண்பு நலன்களை இவர் இந்த நூலில் தக்க சந்த்தர்ப்பங்களில் கையாண்டிருப்பது இந்த நூலுக்காக திவாகர் மேற்கொண்ட திறமான ஆய்வினை வெளிக்காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலைப் படிக்க படிக்க எத்தனையோ புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சிறந்த போர்கப்பல், தான் பயணித்த கடல் பாதையில் நிகழ்த்திய சாகசங்கள், அடைத்த வெற்றிகள் போன்றவற்றைப் படித்து கொள்ளும் போது முந்தைய சரித்திரத்தின் பெருமையை உணர முடிகின்றது. இந்த நாவலை படித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்செயலாக வேரொரு நூலில் 13ம் நூற்றாண்டு ஜெர்மன் வரலாற்றைப் பற்றி படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரை படத்தில் ஜெர்மனியின் வடக்குப் பகுதில் இருக்கும் எம்டன் என்ற ஒரு பிரசித்தி பெற்ற நகரத்தைப் பற்றி இந்த நூல் குறிப்பிட்டிருந்தது. வலைப்பக்கங்களில் தேடிய போது இந்த நகரத்தைப் பற்றிய மேல் விபரங்களை மேலும் தெரிந்து கொள்ள முடிந்தது. நெதர்லாந்துக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்கரை நகரம் எம்டன். விக்கிபீடியாவில் எம்டன் நகரம் 8ம் நூற்றாண்டு தொடக்கம் அமைப்புற்றதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அமுதோன், எம்டா, போன்றயவை இந்த நகரத்திற்கு வழங்கி வந்த பிற பெயர்கள் என்றும் 17ம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் மிகப் பிரசித்தி பெற்ற வளம் கொழிக்கும் நகரமாக இருந்துள்ள செய்தியையும் வலைப்பக்கங்களின் வழி அறிய முடிகின்றது. டச்சுக் காரர்களில் பலர் இங்கு குடிபெயர்ந்துளளனர். ஆனால் இரண்டாம் உலகப்போரின் சமயம் இந்த நகரம் ஏறக்குறைய முற்றிலும் அழிக்கப்பட்டது ஒரு கொடூரம். உலகப் போர் காலங்களில் 3 கடற்படை கப்பல்கள் இந்த நகரின் பெயரைக் கொண்டிருந்தன. அவற்றில் இரண்டு முதலாம் உலகப்போரிலும் மற்றொன்று 2ம் உலகப் போரிலும் ஈடுபட்டது. தற்சமயம் கூட இந்த நகரின் பெயரைத் தாங்கிய ஒரு கடற்படை கப்பல், ஜெர்மானிய கடற்படையில் உள்ளதாகவும், 1980ல் கட்டப்பட்டு 1983ல் கடற்படைச் சேவையில் இந்தக் கப்பல் சேர்க்கப்பட்டதாகவும் விக்கிப்பீடியா மேலும் விவரிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலில் உள்ள மற்றொரு சிறப்பு, ராதை மிகத்துணிச்சலாக மேற்கொள்ளும் ஆய்வுகள். சுவாரசியமான அவளது அனுபவங்கள் அதற்காக அவள் மேற்கொள்ளும் முயற்சிகள் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. ராதையின் இந்த ஆய்வுகளுக்குப் பின்னால் ஒரு சுயநல காரணம் இருந்தாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே தனது உலகத்தை கண்டு வந்த பெண்கள் மத்தியில் இப்படியும் ஒரு தமிழ் பெண் துணிச்சலாக செயலாற்றினாள் என்று சொல்வது வித்தியாசமான ஆனால் பெருமைப்படக்கூடிய ஒரு விஷயமே. இதற்காகவும் திவாகரை பாராட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாகவே திவாகரின் நாவல்கள் தனது தனிச்சிறப்பை வெளிக்காடிக் கொள்வதில் தவறியதில்லை. திருமலைத் திருடனை முதன் முதலில் படிக்க நேர்ந்த போது வாசிப்பதை நிறுத்தமுடியாமல் ஒரு தீவிரத்தோடு படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. அந்த உணர்வு இந்த நூலிலும் குறையவில்லை. ஒரு வகையில் இந்த நாவல் மேலும் அதிகமான ஆர்வத்தைத் தருவதாகவே உள்ளது. ஒரு நாவல் ஏதாவது ஒரு வகையில் ஒரு வித ஆழமான சிந்தனைத் தேடலை, விஷய ஞானத்தை வழங்க வேண்டும் என்பதில் நான் அக்கறையாக இருப்பேன். இது என்னுடை தனிப்பட்ட எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினை இந்த நாவல் ஏமாற்றவில்லை. திவாகரின் சிறந்த ஒரு படைப்பு இது. வாங்கிப் படிக்கும் வாசகனை இந்த நாவல் நிச்சயமாக ஏமாற்றாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-235665276690141458?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/235665276690141458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=235665276690141458' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/235665276690141458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/235665276690141458'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2009/04/sms-22-10-1914.html' title='S.M.S எம்டன் 22-10-1914'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-3638637805150864749</id><published>2007-11-10T14:37:00.000+01:00</published><updated>2007-11-10T14:52:10.331+01:00</updated><title type='text'>பறங்கிக்காய் கண்காட்சி</title><content type='html'>&lt;div&gt;  &lt;p&gt;கண்காட்சிகள் பலவிதம். இங்கு ஜெர்மனியில் லுட்விக்ஸ்புர்க் நகரில் கடந்த 2  மாதங்களாக பொதுமக்கள் பார்வைக்காக ஏற்பாடாகியிருந்த பறங்கிக்காய் கண்காட்சி  கண்ணுக்கு விருந்தாக அமைந்திருந்தது. 31 ஆகஸ்டு தொடங்கி 4 நவம்பர் வரை இந்த  கண்டகாட்சி நடைபெற்றது. உலகின் எல்லா கண்டங்களிலும் காணப்படும் மிருகங்களின்  சாயலில் பறங்கிக்காய்களைக் கொண்டு மிருகங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.  இந்த கண்காட்சி லுட்விக்ஸ்புர்க் அரண்மனையின்  மலர் பூங்காவின் ஒரு பகுதியில்  அமைக்கட்டிருந்தது. 500,000க்கும் மேற்பட்ட பறங்கிக்காய்கள் இந்த கண்காட்சியில்  பயண்படுத்தப்ப்பட்டிருந்தன. அத்தோடு உலகின் பல மூலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட 400  வித்தியாமான் பறங்கிகள் பெயரிடப்பட்டு கண்காட்சியில் பார்வைக்கு  வைக்கப்படிருந்தன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த கண்காட்சியின் போது மிகப் பெரிய கணமான பறங்கிக்க்காய்களுக்கான போட்டியும்  சேர்ந்தே நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கணமான பறங்கிக்க்காய்க்கான பரிசை  பெல்ஜியம் தட்டிச் சென்றுள்ளது. இந்த பறங்கிக்காயின் எடை 583 kg. &lt;/p&gt; &lt;p&gt;கண்காட்சியின் மத்தியில் கூடாரம் அமைத்து பறங்கிக்காய்களைக் கொண்டு சமைத்த உணவு  வகைகளையும் விற்பனைக்கு வைந்த்திருந்தனர். பறங்கிக்காய் சூப், பரங்கிக்காய் பர்கர்,  பறங்கிக்காய் கேக் என பல வகைகள். கண்காட்சிக்கு வருபவர்கள் வாக்கிச் செவதற்காக  பறங்கிக்காய்களைக் குவித்து வைத்திருந்தனர். இந்த பறங்கிக்காய்களில் பொதுவாக இரண்டு  வகை உண்டு. ஒன்று சமையலுக்கு பயன்படுவது. மற்றொன்று வெறும் அழகுக்காக  வளர்க்கப்படுவது. ஆக, வாங்கும் போது எந்த வகை பறங்கிக்காய் வாங்குகிறோம் எனத்  தெரிந்து வாங்குவது முக்கியம்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த கண்காட்சிக்குச் சென்ற போது எடுத்த புகைப் படங்களை  எனது வலைப்பக்கத்தில்  சேர்த்திருக்கிறேன். அவற்றை &lt;a style="color: rgb(255, 204, 102);" href="http://picasaweb.google.de/ksubashini/PumpkinExhibition?authkey=yBcceb6t9bY"&gt;இங்கே காணலாம&lt;/a&gt;&lt;span style="color: rgb(255, 204, 102);"&gt;்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள: &lt;/div&gt; &lt;div&gt; &lt;p&gt;&lt;a href="http://www.theworldly.org/ArticlesPages/Articles2005/November05Articles/GermanPumpkin.html"&gt;http://www.theworldly.org/ArticlesPages/Articles2005/November05Articles/GermanPumpkin.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blueba.de/Veranstaltungen/Kuerbis/kuerbis.html"&gt;http://www.blueba.de/Veranstaltungen/Kuerbis/kuerbis.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-3638637805150864749?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/3638637805150864749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=3638637805150864749' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/3638637805150864749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/3638637805150864749'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2007/11/blog-post.html' title='பறங்கிக்காய் கண்காட்சி'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-111425663727956684</id><published>2005-04-23T13:32:00.000+02:00</published><updated>2005-04-23T13:43:57.283+02:00</updated><title type='text'>பால் மரக் காட்டினிலே!</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.indiavarta.com/Shopping/Books/Tamil/Images/NNovel/TMMISCN073.jpg" /&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;நீண்ட இடைவெளிக்குப் பிற்கு இடையில் சில நாள் ஓய்வு கிடைத்தது. கடந்த முறை இண்டியாவர்த்தா இணையத்தளத்தின் வழி வாங்கியிருந்த புத்தகங்களில் சிலவற்றை படிக்கும் வாய்ப்பாக எனக்கு அமைந்தது. பால்மரக்காட்டினிலே - அகிலன் எழுதிய ஒரு நாவல். மலேசிய தோட்டப்புர வாழ்க்கை பின்னனியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஒரு நாவல் இது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.geocities.com/sounvx/image/rubecon.gif" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கதை முழுவதையும் படித்து முடித்த போது மலேசிய தோட்டப்புர மக்களின் வாழ்க்கையைக் கண்களால் பார்ப்பது போலவே இருந்தது. பல இடங்களில் தென்படும் மலாய் மொழி கலந்த மலேசியத்தமிழின் பிரயோகம், இந்த தோட்டத்திலேயே இருந்து கதை கேட்பது போன்ற எண்ணத்தை வரவழைக்கின்றது. கதைக்குக் கருவாக அவர் எடுத்திருக்கும் தோட்டத் துண்டாடல் பிரச்சனை என்பது மலேசிய தோட்டத்தொழிலாளர்களை மிக மோசமாக பாதித்த ஒரு வரலாற்று நிகழ்வு. இதனை கதையாகக் கொண்டு இவர் வடித்திருக்கும் பாங்கு நெஞ்சைத் தொடுகின்றது என்றே சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பினாங்குத்தீவிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு தோட்டப்புற வாழ்க்கை பரிட்சயமற்ற ஒன்று என்றே சொல்ல வேண்டும். இளம் வயதில் மலேசிய இந்து சங்கத்தின் சார்பிலும், பினாங்கு பயனீட்டாளர் சங்க சார்பிலும் வார இறுதி நாட்களில் தோட்டப்புறங்களில் சமூக சேவைக்காக சென்ற நாட்களில் பினாங்குக்கு அருகாமையில் உள்ள சில தோட்டங்களுக்கு அவ்வப்போது சென்ற அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை இதுவரை நான் ஆழமாக கண்கானித்ததில்லை. இந்த நாவல் அந்த அனுபவத்தை அழகாக வழங்கியிருக்கின்றது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாவலில் வருகின்ற கதாபாத்திரங்களில் பாலன், கணேசன், கண்ணம்மா, தலைமை ஆசிரியர் சண்முகம், முருகன், வேலம்மாள், ராதா, முத்து, செல்லம்மா ஆகிய அனைத்து காதாபாத்திரங்களும் நாவலை படித்து முடித்த பின்னரும் யோசிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கிராம இளைஞன் பாலன் மனதில் தோன்றும் சமூக பிரக்ஞை மனதைத் தொடுகின்றது. வாழ்க்கையையே தோட்டப்புற மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் அவனது கதாபாத்திரம் எனது மலேசிய நாட்டில் நான் சந்தித்த சிலரை எனக்கு மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வராமலில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட மலேசியாவிற்குத் தமிழகத்திலிருந்து குடியேறிய மக்களின் வாழ்க்கை பல வகையில் இன்னல்களுக்கு ஆட்பட்டிருந்தது என்பதே உண்மை. 80களின் ஆரம்பத்தில் மலேசிய தேசிய பலகலைக்கழக பேராசிரியர் (தமிழர்) ஒருவரின் முயற்சியில் வெளிக்கொணரப்பட்ட செலாயாங் தமிழ் மக்களின் வாழ்க்கை பிரச்சனை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. படிப்படியாக நாடு முன்னேறிய போதிலும் இன்றளவும் கூட தமிழ் மக்கள் செம்பனை மற்றும் ரப்பர் மரத்தோட்டங்களில் (காடுகளில்) வாழும் வாழ்க்கை மனதை கசிய வைக்கும் ஒன்று. மக்களின் அறியாமை போக்கப்படும் போது தான் மாற்றம் ஏற்படும் என்பதை இந்த நாவல் நன்றாகக் காட்டுகின்றது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஒருவர் பிறர் நலனுக்காக யோசித்து பாடு படும் போது அவர்களை தாழ்வாக விமர்சனம் செய்து மனதை நோகடிப்பது மற்றும் தனது சுய நலனுக்காக தனது இனத்திற்கு மாறாக செயல்படுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த நாவலில் காட்டபப்டுகின்றன. இது இன்றளவும் மாறாமலிருக்கும் ஒன்று. மலேசிய தமிழ் சமூக அமைப்புக்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பர்களோடு பேசும் போதெல்லாம் இப்படிப்பட்ட சில நபர்களின் செயல்களைப் பற்றியும் நாங்கள் பேசி அலசுவதுண்டு. இது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு சாபக்கேடு என்று அடிக்கடி பத்திரிக்கையில் பணியாற்றும் ஒரு நண்பர் குறிப்பிடுவார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இந்த நாவலின் முதல் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. தாகம் வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை பலர் ஏற்கனவே படித்திருக்கக் கூடும். மலேசிய தோட்டப்புற தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நாவல். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#ff9900;"&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அலசும் ஒரு வலைப்பக்கத்திற்குச் செல்ல &lt;/span&gt;&lt;a href="http://www.geocities.com/sounvx/plantation_workers.htm"&gt;&lt;span style="font-size:85%;color:#ff9900;"&gt;இங்கே கிளிக் செய்யவும்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;color:#ff9900;"&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-111425663727956684?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/111425663727956684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=111425663727956684' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/111425663727956684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/111425663727956684'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/04/blog-post_23.html' title='பால் மரக் காட்டினிலே!'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-111364682159787494</id><published>2005-04-16T12:11:00.000+02:00</published><updated>2005-05-08T18:04:19.926+02:00</updated><title type='text'>கர்நாடக இசைக்கச்சேரி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து இங்கு ஜெர்மனியில் கர்நாடக இசை வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஏப்ரல் இரண்டாம் திகதி ப்ராங்பர்ட் நகரத்தில் ஒரு நாள் முழுவதும் இடைவிடாது தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டு மிகச்சிறப்பாக தியாகராத ஆராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பிரத்தியேகமாக வந்திருந்த இசை வித்துவான்களிள் திரு.அசோக் ரமணியும் ஒருவர். இந்த நிகழ்ச்சிக்காக இங்கு வந்திருந்தவர் ஐரோப்பாவில் முக்கிய சில நகரங்களில் இசை கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் புது வருடத்தை இசையோடு வரவேற்பதற்காக அவரது கச்சேரியை இங்கு ஸ்டுட்கார்ட் சித்தி விநாயகர் ஆலத்தில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p align="center"&gt;&lt;img height="249" src="http://people.freenet.de/thf/subadepot/ramani.jpg" width="368" /&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;திரு.அசோக் ரமணி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரு.அசோக் ரமணி கர்நாடக இசை உலகிற்கு தமிழ் கீர்த்தனைகளை வழங்கிய முக்கியமான ஒருவராகிய பாபநாசம் சிவன் அவர்களின் பேரன். இவர் கர்நாடக இசையோடு மிருதங்க இசைக்கருவியை வாசிக்கவும் கற்றவர். வாய்ப்பாட்டிலும் மிருதங்கத்திலும் தமது 15வது வயதிலேயே அரங்கேற்றம் செய்து புகழ் பெற்றவர். இவரது இசை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 அளவில் தொடங்கி இடைவிடாது 10:30 மணி வரையில் நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;img height="257" src="http://people.freenet.de/thf/subadepot/crowd.jpg" width="400" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;ஆலயம் நிறைந்த பார்வையாளர்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்டுட்கார்ட் நகரைப் பொருத்தவரை இம்மாதிரியான இசை நிகழ்வுகள் நடைபெருவது அபூர்வம் என்றே சொல்லலாம். வருடத்திற்கு அதிகபட்ஷம் 2 முறை தமிழகத்திலிருந்து யாராவது இங்கு வந்து தலையைக் காட்டினால் உண்டு. இல்லையென்றால் தமிழ் தொலைக்காட்சி வழியாகத்தான் கர்நாடக இசையை ரசிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் குறையையும் போக்குவதாக அமைந்தது இந்த நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img style="WIDTH: 354px; HEIGHT: 247px" height="321" src="http://people.freenet.de/thf/subadepot/teamt.jpg" width="362" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;பிரபாவதி குமரன், திரு.தமிழ்குமரன், திரு.அசோக் ரமணி, சுபா, திரு.யோக புத்ரா, அபிராமி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கச்சேரியின் முக்கியமான அம்சம், எல்லா பாடல்களுமே தமிழ் கீர்த்தனைகள். மனதை கொள்ளை கொண்டன இந்த தமிழ் கீதங்கள். பலருக்கும் தெரிந்த என்ன தவம் செய்தனை யசோதா, கந்தா வா, தீராத விளையாட்டுப் பிள்ளை, அலைபாயுதே கண்ணா, அகிலாண்டேஸ்வரியே என்ற பாடல்களோடு மேலும் பல தமிழ் கீர்த்தனைகளும் அடங்கியிருந்தன. இவருக்குப் பக்க வாத்தியமாக ஜெர்மனி டோ ர்ட்முண்ட் நகரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பிரணவநாதன், வயலின் பிரணவன் மற்றும் கஞ்சிராவிற்கு ஒரு ஜெர்மானியரான ப்ராங்போர்ட்டைச் சேர்ந்த ஹெர்பெர்ட் லாங் ஆகியோர் அமைந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img style="WIDTH: 380px; HEIGHT: 276px" height="319" src="http://people.freenet.de/thf/subadepot/children.jpg" width="372" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#ffccff;"&gt;&lt;span style="color:#ff99ff;"&gt;இசை வகுப்பில் பயிலும் மாணவர்கள் திரு.அசோக் ரமணியோடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒன்றினை கவனிக்க முடிந்தது. முன்பெல்லாம் சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது பல சிறுவர்கள் சத்தம் போடாமல், அங்கும் இங்கும் ஓடாமல் பாட்டுக்குத் தாளம் போட்டு தலை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆலயத்தில் தொடர்ந்து இசை பயின்று வரும் இந்தச் சிறுவர்கள் இப்போது இசையை ரசிக்கத் தாமாகவே பழகி விட்டனர். இதைப் பார்க்கும் போது மனதிற்கு பெறும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இம்மாதிரியான கச்சேரிகள் இங்கு தொடர்ந்து நடைபெற வேண்டும். இதனால் இங்கு வாழும் தமிழர்களும் இசையோடு ஒன்றி வாழும் வாய்ப்பு நிச்சயம் வளரும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-111364682159787494?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/111364682159787494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=111364682159787494' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/111364682159787494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/111364682159787494'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/04/blog-post.html' title='கர்நாடக இசைக்கச்சேரி'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-111002561063200842</id><published>2005-03-05T13:13:00.000+01:00</published><updated>2005-03-05T13:26:50.636+01:00</updated><title type='text'>மாரியாத்தா..!</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அலுவலகத்தில் நேற்று ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்ததது. அவளது பெயர் மாரியாத்தா. தமிழ் பெயராக இருக்கிறதே தமிழ் பெண்ணோ என்று நினைத்து விட வேண்டாம். மேற்கத்திய பெண்தான் இவள். இவள் பெயர் என்னை இவளைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்று தூண்டியது. சும்மா இருக்காமல், அவளிடமே விசாரிக்க ஆரம்பித்து விட்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;அவள் ரோமானியப் பெண். ரோமானிய நாட்டிலிருந்து வந்து இப்போது இங்கு எனது அலுவலகத்திலேயே ஒரு பிரிவில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் பெயர் தமிழ் பெயர் போலவே இருக்கின்றது என்று சொன்னேன். அவளுக்கும் ஆச்சரியம். எழுதும் போது Mariatta என்று எழுதுகிறாள். உச்சரிக்கும் போது 'மரியட்டா' என்றில்லாமல் "மாரியாத்தா'' என்று தான் உச்சரிக்க வேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் மாரியம்மா, மாரி, மாரியாத்தா என்றெல்லாம் இந்தப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல மலாய் இனத்திலும், மரியம், மரியா என்றும் ஆங்கிலத்தில் மேரி என்றும் ஜெர்மானிய பெண்களிடையே மரிலூயிஸா, மரியானா, மரியா என்றும் இருக்கின்றது. ஆனால் ரோமானிய மொழியிலும் இதே பெயர் தமிழ் பெயர் போலவே இருப்பதைக் கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழியைப் பொறுத்தவரை இப்போதெல்லாம் இந்தப் பெயர் பிரபலமான ஒன்றல்ல. மாரியாத்தா என்றவுடனேயே நமது மனகண்ணில் மாரியம்மன் தான் தோன்றுவாள். மலேசியாவில் ரப்பர் மரத்தோட்டங்களிலும் செம்பனை மரத்தோட்டங்கள் உள்ள இடங்களிலும் சிறிய சிறிய கோயில்கள் (மரத்தடி கோயில்கள்) ஏராளம் இருக்கும். பெரும்பாலும் வீரபத்திரன், மாரியம்மன் தான் வழிபடு தெய்வங்கள். அதிலும் மாரியம்மன் கோயிலென்றால் அதற்கு வருவோரும் அதிகம். திருவிழாக்களின் போது ஆட்டை பலிகொடுத்து பெரிய அளவில் விருந்து சமைத்து கிராமத்தில் இருக்கும் தமிழர்களெல்லாம் ஒன்று கூடி விழா கொண்டாடும் நிலை இன்னமும் மலேசிய கிராமங்களில் உள்ளது. கிராமங்களில் சில இடங்களில் இந்த தெய்வத்தை நினைத்து, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஒரு சிலர் மாரியம்மா என்ற பெயரை வைக்கின்றனர். ஆனால் இது குறைந்து கொண்டுதான் வருகின்றது. ஜெர்மனியைப் பொறுத்தவரை நிலமை அப்படியல்ல. மரியா, மரியானா என்பவை ஜெர்மானியர்களிடையே இப்போதும் பிரபலமான பெண்களுக்கான பெயர்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.cbmphoto.co.uk/photos2/LT04.jpg" /&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;அலுவலகத்தில் மாரியாத்தாவை பார்க்கும் போதெல்லாம் மாரியம்மனை நினைக்காமல் இருக்கமுடியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-111002561063200842?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/111002561063200842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=111002561063200842' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/111002561063200842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/111002561063200842'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/03/blog-post.html' title='மாரியாத்தா..!'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110951087336857917</id><published>2005-02-27T14:21:00.000+01:00</published><updated>2005-02-27T14:33:29.463+01:00</updated><title type='text'>ஆஷாடபூதி.... ????</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சில நாட்களுக்கு முன்னர் இந்த மாத (Feb) திசைகள் இதழில் திரு.நரசய்யா எழுதியிருந்த &lt;a href="http://www.thisaigal.com/oct04/story1.html"&gt;மூச்சை நிறுத்திவிடு &lt;/a&gt;என்ற தலைப்பிலான சிறுகதையைப் படித்தேன். கடந்த சில நாட்களாக எனது மனதில் இந்தக் கதையைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒரு உண்மை சம்பவத்தை கதையாக வடித்திருக்கின்றார் திரு.நரசய்யா. அருமையான கதை! கதையை விமர்சிப்பது இந்த பதிவின் நோக்கமல்ல. இதனை ஒட்டி என் மனதில் தோன்றிய எண்ணங்களைத்தான் இங்கு பதிவாக்க விரும்புகிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.allposters.com/IMAGES/TOP/EDV846.jpg" /&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனதில் தோன்றுகிற எல்லா எண்ணங்களையும் நம்மால் உண்மையிலேயே எந்த பாகுபாடும் இல்லாமல் ப஡ர்க்க முடிகின்றதா என்பதுதான் கேள்வி. மனிதர்களாக பிறந்த அனைவருமே சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்பட்டவர்களே. ஆனால் அந்த சலனத்தையும் சபலத்தையும் நம்மால் உற்றுப் பார்த்து நானும் தவறு செய்யும் ஒரு மனிதர்தான் என்று நம்மால் சொல்லிக் கொண்டு இந்த நிலையிலிருந்து வெளியேறி நம் அழுக்குப் படிந்த மனத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்ய துணிவு இருக்கின்றதா என்பதும் ஒரு கேள்வி. பொதுவாகவே நமது மக்களிடையே மேற்கத்தியர்கள் என்றால் இரண்டு விதமான பொதுப்படையான எண்ணம் தான் இருக்கின்றது. ஒன்று மேற்கத்தியர்கள் அறிவியல், தொழில்நுட்பம் பொருளாதாரம் ஆகியற்றில் மிக மிக மிக உயர்ந்தவர்கள் என்பது. மற்றொன்று மேற்கத்தியர்கள் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப ஒழுக்கம் ஆகியற்றில் மிக மிக குறைந்தவர்கள் என்பது. வெள்ளைக்காரிதானே, அவளுக்கு உடம்பு தெரியத் தெரிய உடை உடுத்திக் கொள்ளத்தான் தெரியும்; அவர்களுக்கெல்லாம் கணவன் குடும்பம் என்ற பக்தி பண்பாடு எல்லாம் சுத்தமாக இருக்காது, என்று மேம்போக்காக பேசுபவர்கள் பலர் நம்மிடையே உண்டு. இப்படி பிறரை தாழ்வாக சுட்டும் நமது விரல்கள் நமது பண்பாட்டில் உள்ள ஓட்டைகளை சுட்டிக் காட்ட எழுகின்றனவா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மிகத் துரிதமாக வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்திலும் நம்மிடையே எத்தனையோ தாழ்வான குணங்கள் மனதில் பதிந்திருக்கின்றன, மாற்றம் அடையாமலேயே! ஜாதி என்ற பெயரில் மக்களை பிரித்து வைத்து சொல்லாலும் செயலாலும் துன்பப்படுத்தும் நிலை இன்று மாறி விட்டதா? ஆண் பெண் என்று பேதம் பிரித்து வைத்து ஆலயத்திலும், சடங்குகளிலும் கலாச்சார நிகழ்வுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் குறைந்து விட்டனவா? திருமணம் செய்து கொண்ட பெண்களில் பலர் சுயமாக, சுதந்திரமாக இன்பகரமான வாழ்க்கையை வாழ முடிகிறதா? சுய முடிவு எடுக்கும் சுதந்திரம் இருக்கின்றதா? இந்தக் கேள்விகளெல்லாம் பலர் பல நேரங்களில் கேட்ட கேள்விகள் தான். இவற்றையெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம் ஆனால் வாழ்க்கையில் நமக்கென்று வரும் போது எப்படி செயல்படுகிறோம் என்பது தான் கேள்வி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;மலேசியாவில் இருக்கும் என் தோழி ஒருத்தியோடு சில நாட்களுக்கு முன்னர் பேசிக் கொண்டிருந்தேன். 6 வருடக் காதல் இப்போது இனிக்கவில்லை. கசக்க ஆரம்பித்துவருகிறது என்று புலம்பினாள். தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கின்றது என்று அழுதாள். இவளது காதல் நிலவரம் இப்போதுத஡ன் எனக்குத் தெரிய வந்தது. அதுவும் நானே வற்புறுத்திக் கேட்ட பிறகுதான் என்னிடம் சொல்ல அவளுக்கு தைரியம் வந்தது. எனக்கு மிகுந்த வருத்தம். "இப்படி நெருக்கமாக பழகும் என்னிடமே இத்தனை நாள் இந்த பிரச்சனையை மறைத்து உனக்குள்ளேயே வருந்திக்கொண்டிருந்தாயே. உன்னிடம் என்னுடைய எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கின்றேனே. அதில் என்னுடைய சலனங்களும் சபலங்களும் கூட அடங்குமே. இப்படியிருக்க நீ மட்டும் ஏன் என்னிடம் மறைத்து மறைத்து இப்படி ஏமாற்றுகிறாய் என்று மனதில் பட்டதை கேட்டு விட்டேன். அதற்கு அவள் தந்த பதில் இதுதான். "நீ இப்போது மலேசியக்காரி இல்லை. நீ வெளியூர்காரி. உன்னுடைய மனதில் தோன்றும் எண்ணங்களை நீ சுலபமாக வெளியிட முடியும். இதனால் உனக்கு உன் சுற்றுப் புறத்தில் உள்ளவர்களால் உனக்கு பாதிப்பு ஏற்பட்டாது. ஏனென்றால் அவர்களுக்கு உன்னுடைய சொந்த விஷயம் என்பது உன்னுடைய தனிப்பட்ட விஷயம். உன் மனமும் இந்த வாழ்க்கை முறைக்கு ஏற்றார்போல அப்படி பக்குவப்பட்டு விட்டது. உன்னால் தைரியமாக பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஆனால் என் நிலமை அப்படியல்ல. என்னைச் சுற்றி உள்ளவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை மிக மிக கவனமாக பார்த்து வருகின்றார்கள். இதில் சின்ன தவறு ஏற்பட்டாலும் அதனால் என்னுடைய மானமே போய்விடும். நான் மறைத்து மறைத்து தான் வாழ முடியும். இல்லாவிட்டால் இந்த சமூகத்தில் என்னுடைய பெயர் கெட்டுவிடும். காமம் சார்ந்த விஷயம் என்பது மக்களுக்கு பேசி அலசுவதற்கு சுவையான ஒரு விஷயம். அதிலும் மற்ற பெண்களைப் பற்றி பேசுவதென்றால் ஆண் பெண் இருபாலருக்குமே அல்வா சாப்பிடுவது மாதிரி" என்று சொன்னாள். இப்படி சொல்லும் இவள் காதலிப்பது திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவரை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முதலில் உருகி உருகி காதலித்த இந்த திருமணமானவருக்கு இப்போது தான்,  தான் செய்வது தவறு என்று புரிய ஆரம்பித்திருக்கிறதாம். அதனால் இந்த உறவை படிப்படியாக முறித்துக் கொள்ளலாமே என ஆலோசனை கூறியிருக்கிறார். இவரை நம்பி, வந்த வரனையெல்லாம் தடுத்துவிட்ட இந்த நாற்பதை எட்டும் பெண் இப்போது தலையில் இடி விழுந்த மாதிரியான அதிர்ச்சியில் இருக்கிறாள். அவருக்கும் உனக்கும் தெரிந்த நண்பர்களிடம் கூறி பேசிப் பார் என்றேன். "வெளியே சொல்லமுடியாது சுபா. அவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். என்னுடைய பெயர் தான் கெட்டுப் போகும். சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் பாதிப்பு. அப்படிப்பட்ட சமுதாயத்தில் தான் நான் வாழ்கிறேன்" என்றாள் என் தோழி.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;என்ன நியாயம் இது? ஏன் இந்த பாகுபாடு. உண்மையிலேயே நமது சமுதாயம் இந்த பாகுபாட்டை ஆதரிக்கின்றது என்றால் இது ஒரு குறையுள்ள சமுதாயம் தான். பண்பாட்டில் நாம் உயர்ந்தவர்கள் என்று பேசுகின்றோம். எப்போது இம்மாதிரியான மனித பாகுபாடு, ஜாதி பாகுபாடு, ஏற்றத்தாழ்வு எல்லாம் நமது மக்கள் சிந்தனையிலிருந்து ஒழிகின்றதோ அப்பாதுதான் நாம் பண்பாட்டில் உயர்ந்தவர்களாக நம்மை கருதமுடியும். நமது மனதில் உள்ள அழுக்கான சிந்தனைகளை வெளியே காட்டாமல் வெற்றிகரமாக மறைத்து வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வாழ்க்கையில் நிகழ்கின்ற சிறிய சிறிய பிரச்சனைகளையும் பேசி பேசி அவர்களைத் துன்பப்படுத்துவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து வருகின்றது. இதையெல்லாம் யோசிக்கும் போது என் தோழிக்காக மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110951087336857917?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110951087336857917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110951087336857917' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110951087336857917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110951087336857917'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/02/blog-post_27.html' title='ஆஷாடபூதி.... ????'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110901231601899182</id><published>2005-02-21T19:54:00.000+01:00</published><updated>2005-02-21T20:05:28.656+01:00</updated><title type='text'>பீஸா போட்டி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சனிக்கிழமை உள்ளூர் ஜெர்மானிய தொலைக்காட்சி சேனல் ZDF -ல் ஒலியேறிய Wetten Dass நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. இது மக்களிடையே புதைந்துள்ள வித்தியாசமான திறமைகளை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இதில் கலந்து கொள்ள 4 குழுக்கள்/தனிபர் வந்திருந்தனர். அதில் ஒன்று என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;2 நண்பர்கள். இவர்களுடைய திறமை என்னவென்றால் எந்த விதமான ரெடி மேட் பீஸா (Pizza) வாக இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டே அந்த பீஸாவின் பெயரை சொல்லிவிடுவதுதான். இந்த இருவரும் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் மிக அதிகமாக பீஸாவையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிருந்ததால் அவர்களுக்கு உள்ளூரில் கிடைக்கக்கூடிய எல்லா brand பீஸாவும் அத்துப்படி. "எந்த பீஸாவாக இருந்தாலும் கொடுங்கள். கண்களை மூடிக் கொண்டு அது என்ன பீஸா என்று சொல்லி விடுவோம்" என்று சவால் விட்டுக் கொண்டு வந்திருந்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இவர்களுக்கு நான்கு வாய்ப்புக்கள் தான் வழங்கப்படும். இந்த நான்கிலும் சரியான பீஸாவை பெயரைச் சொன்னால் அடுத்த கட்ட சோதனைக்குச் சென்று பிரமாதமான பரிசுகளைத் தட்டிச் செல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p align="center"&gt;&lt;img style="WIDTH: 301px; HEIGHT: 180px" height="187" src="http://www.papajohns.com/menu/productshots/images/product_themeats.gif" width="318" /&gt;&lt;/p&gt;இவர்களை சோதிப்பதற்காக ஜெர்மனியில் கிடைக்கக்கூடிய ஏறக்குறைய 200 விதமான பீஸாக்களை வரவழைத்து அதனை பெரிய குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இது கண்ணாடியால் ஆன குளிர்சாதனப் பெட்டி. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் தெரியும் வகையில் பீஸாக்களை இந்த கண்ணாடி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டனர். இதில் இத்தாலியன், ஆசியன், கொரியன், அமெரிக்கன் பீஸாக்களும் அடங்கும். இப்போது மிகப் பிரபலமாக உள்ளூர் அங்காடிகளில் கிடைக்கக்கூடிய Big Pizza வகைகளும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img height="214" src="http://www.papajohns.com/menu/productshots/images/product_chickenclub.jpg" width="318" /&gt;&lt;/p&gt;இரண்டு நண்பர்களையும் கண்களைக் கட்டி ஒருவருக்கு முன் ஒருவரை அமர வைத்து விட்டனர். கண்கள் நன்றாக மறைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டபின் சோதனை ஆரம்பமானது. இந்த பீஸா குவியலிலிருந்து ஒன்றை எடுத்து அதன் அட்டைகளை உருவி விட்டு ஒருவர் கையில் வைக்க, அதனை விரல்களால் தொட்டுப் பார்த்தே அதில், காளான் அல்லது மிலகாய், அல்லது டூனா, காய்கறிகள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே 4 பீஸாக்களையும் நண்பர்கள் கண்டு பிடித்து விட்டனர். ஒவ்வொரு பீஸாவையும் நிகழ்ச்சி நடத்துனர் இவர்கள் கையில் கொடுக்கும் போது எனக்கு சந்தேகம் தான். எப்படி இவர்கள் சரியாக இதன் brandஐ கண்டுபிடிக்கப் போகின்றார்கள் என்று. ஒவ்வொரு சோதனைகளையும் இரண்டு நிமிடங்களுக்குள் செய்து முடித்து வெற்றி பெற்றனர் இந்த நண்பர்கள். ஏந்த வகை பீஸா என்று கூட சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் அது எந்த brand என்று கண்டு பிடிப்பது அவ்வலவு சுலபமான காரியம் இல்லையே. சீஸ் பீஸாவிலேயே 30 வகை இங்கு கிடைக்கின்றன. அதேபோலத்தான் டூனா பீஸாக்களிலும் 20 / 30 வகைகள். இப்படியிருக்க இவர்களால் இப்படி பிரித்து இனம் கண்டு பிடிக்க முடிந்ததைப் பார்த்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்திராத, மிக மிக ஆச்சரியப்பட வைத்த சுவாரசியமான போட்டி இது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110901231601899182?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110901231601899182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110901231601899182' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110901231601899182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110901231601899182'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/02/blog-post_21.html' title='பீஸா போட்டி'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110881761182827680</id><published>2005-02-19T13:31:00.000+01:00</published><updated>2005-02-19T13:53:31.836+01:00</updated><title type='text'>வந்தது பிரச்சனை!</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கடந்த ஒரு வருடமாக நான் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள விநாயகர் ஆலயத்தில் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த இசை தம்பதியர். கணவர் வயலின் கற்றுக் கொடுக்க மனைவி வீணையும் வாய்ப்பாடும் சொல்லித் தருகின்றார். இதுவரை வகுப்பு மிக நன்றாக நடந்து கொண்டுதானிருந்தது. ஏறக்குறைய 30 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் வகுப்புக்குச் சென்ற போது ஆசிரியர் தம்பதிகள் வகுப்புக்களை நிறுத்தப்போவதாக சொன்ன போது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் இது தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;முதலில் ஸ்டுட்கார்ட் நகரில் ஒரு விநாயகர் ஆலயம் இருந்தது. நிர்வாகத்தில் ஏற்பட்ட பூசலில் இந்த ஆலயம் இரண்டாகப் பிரிந்து மூலவிக்ரகத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர் ஒரு குழுவினர். அதன் பிறகு தொடக்கத்திலிருந்து இந்த ஆலயத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர்கள் இந்தியாவிலிருந்து சுவாமி சிலைகளை வரவழைத்து, ஒரு கட்டிடத்தின் 2ம் தளத்தில் இந்தக் கோயிலை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். மூலவிக்ரகத்தை எடுத்துச் சென்ற மற்றொரு குழுவினர் இந்த கோயில் இருக்கும் இடத்திலிருந்து 15 கிமீ தூரத்திலேயே இன்னொரு ஆலயத்தை அமைத்து அதனை பராமரித்து வருகின்றனர். இரண்டு ஆலயங்களுக்கும் ஒரே பெயர். ஒரு ஆலயத்திற்குச் செல்பவர்கள் மற்ற ஆலயத்திற்குச் செல்லக்கூடாது என்பது மாதிரியான எழுதா சட்டம் வேறு. ஆக ஒரு ஆலயத்தில் இசை வகுப்பு நடப்பதால் மற்ற கோயிலுக்குச் செல்பவர்கள் இந்த இசை வகுப்பில் கலந்து கொள்ளமுடியாத நிலை. படிப்படியாக வந்து கொண்டிருந்த 30 மாணவர்களில் பலர் நின்று விடவே இப்போது 10 மாணவர்கள் மட்டுமே ஆசிரியர் குடும்பத்திற்கு மிஞ்சியிருக்கின்றனர்.&lt;br /&gt;இந்த வகுப்புக்களின் வழி தான் அவருக்கு மாத வருமானமே. இப்படிப் பட்ட நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் பொதுவாக மூலைக்கு மூலை Volkshochschule எனப்படும் கல்விக் கூடங்கள் இருக்கின்றன. பொதுவாக இங்கு ஜெர்மானிய, ஆங்கில, ப்ரெஞ்சு போன்ற மொழிகளோடு மற்ற ஏனைய இசைக் கருவிகள் வாசித்தல், சமையல், தையல் கலை, கைவினைப் பொருட்கள் செய்யும் கலை போன்றவற்றிற்கான வகுப்புக்களும் நடக்கின்றன. ஆக எங்கள் இசை ஆசிரியரிடம் இந்த Volkshochschule மாதிரியான பள்ளிகளில் பதிந்து கொண்டு வகுப்புக்களை நடத்த ஆரம்பிக்க வேண்டியது தானே. தமிழர்கள் மட்டுமன்றி மற்ற இனத்தவரும் சேர்ந்து படித்து தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்குமே என்று சொல்லிப் பார்த்தேன். அதற்கு அவர் கூறிய பதில் வேதனைக்குறியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;இப்போது 30EUR ஒரு மாணவருக்குக் கட்டணம் விதிக்கிறோம். அதையே அங்கே செய்ய முடியாது. ஏனென்ற஡ல் குறைந்த பட்சம் 50EUR கட்டணம் வசூலிக்க வேண்டும். மற்ற இனத்தவர் நடத்தும் வகுப்புக்களின் சராசரி கட்டணம் இப்படித்தான் இருக்கின்றது. அதோடு இந்த வகுப்புக்களை நடத்த இடம் தருவதால் பள்ளி நிர்வாகத்தினருக்கும் குறைந்த பட்சத் தொகையாக (ஏறக்குறைய 100 அல்லது 200 EUR ) தரவேண்டியிருக்கும். 50க்கு கட்டணத்தை உயர்த்திவிட்டால் இப்போது வருகின்ற தமிழ் மாணவர்கள் கூட அப்போது வரமாட்டார்கள். 50 EUR என்பது மிகப்பெரிய தொகையாகிவிடும். வகுப்புக்களைத் திறமையாக சிறப்பாக நடத்த Volkshochschule பள்ளிகளில் நடத்துவது தான் சிறந்தது. ஆனால் இது எங்களுக்கு ஒரு விஷப்பரீட்சையாக முடிந்து விட்டால் எங்களுக்குத்தான் பிரச்சனை" என்று சொல்லி வருந்தினார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;ஆக இரண்டு பிரச்சனைகள் இங்கு முன் நிற்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;1. பிளவு பட்டுக் கிடக்கும் ஸ்டுட்கார்ட் தமிழ் மக்களால் பரிதாபமாக இந்த இசை வகுப்பு பாதியிலேயே நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;2. தெய்வீக அனுபவத்தை ஈட்டித் தரும் இசையைக் கற்றுக் கொள்ள பணத்தை ஒரு காரணமாகக் காட்டி வகுப்புக்களுக்கு வராமல் நின்று விடுவதா என்பது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.allposters.com/IMAGES/pf/lr_33.jpg" /&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;நல்ல பண்புகளையும் நல்லனவற்றையும் தூரத்தள்ளி வைத்து வெறுப்பை வளர்த்துக் கொள்வதால் யாருக்குப் பயன்? தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விதண்டாவாதப் போக்கினால் யாருக்கும் நண்மை ஏற்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. இழப்புக்கள் தான் அதிகரிக்கின்றன!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110881761182827680?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110881761182827680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110881761182827680' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110881761182827680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110881761182827680'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/02/blog-post_19.html' title='வந்தது பிரச்சனை!'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110863446498717393</id><published>2005-02-17T10:52:00.000+01:00</published><updated>2005-02-17T11:42:08.486+01:00</updated><title type='text'>ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் VIP</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;1989ல் ஹெல்முட் கோல் அவர்கள் சேன்சலராக இருந்த பொழுது, இப்போதைய அமெரிக்க அதிபரின் தந்தை புஷ் ஜெர்மனிக்கு சிறப்பு விஜயம் செய்திருந்தார். அப்போது அவருக்கு ஜெர்மானிய மக்களிடமிருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் வருகின்ற 23ம் தேதி ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் புஷ் எப்படிப்பட்ட வரவேற்பை பொதுமக்களி&lt;br /&gt;டமிருந்து பெற்றுக் கொள்ளப்போகிறார் என்பது இப்போது ஒரு புதிராகத்தான் இருக்கின்றது. BBCயின் ஒரு ஆய்வில் 77% ஜெர்மானிய மக்களின் சிந்தனையில் அமெரிக்க அதிபர் புஷ் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வு ஒரு அபாயகரமான ஒன்று என்று அவர்கள் நினைப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் படித்ததாக ஞாபகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய சூழ்நிலையில் பொதுவாக ஜெர்மானிய மக்களுக்கு அமெரிக்க அதிபர் புஷ் மக்களின் மனம் கவர்ந்த ஒருவரல்ல. ஈராக் போர் ஆரம்பித்த காலம் தொட்டு இந்த மனப்போக்கு பெரிதாக வளர்ந்து வந்திருக்கின்றது. பொதுமக்கள் மட்டுமன்றி அரசாங்கத் தலைவர்களும் புஷ்ஷுக்கு எதிர்ப்பான தங்கள் அபிப்ராயங்களையே முன் வைத்து செயல்பட்டனர், அச்சமயத்தில். போர் ஆரம்பித்த பின்னர் சிலமுறை இரண்டு நாடுகளின் அரசியல் தூதுவர்களிடையே பல சமாதான தூது போகும் நிகழ்வுகள் நடந்தன. கடந்த ஆண்டு ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் பிஷர் அமெரிக்கா சென்று வந்தததும் இந்த முக்கிய நோக்கத்தோடுதான். ஆனாலும் பெரிதாக எந்த பலனும் கிடைத்தபாடில்லை. இதற்கிடையே ஜெர்மனியின் மிகப் பிரபலமான ஒரு எதிர்கட்சியின் தலைவியான அங்கேலா, புஷ்ஹுக்கு சாதகமாக பல வேளைகளில் தனது அபிப்ராயங்களை வெளியிட்டிருக்கின்றார். மிக வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய அங்கேலா இப்படி புஷ்ஷுக்குச் சாதகமாகப் பேசுவதை அவருடைய ஆதரவாளர்களில் சிலர் கூட எதிர்த்திருக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பனிப்பேய் விரட்டும் வைபவமான ரோஸன் மோண்டாக் வீதி உலா வைபவத்தின் போது புஷ்ஷையும் அங்கேலாவையும் கேலி பேசும் ராட்ஷச பொம்மைகளையும் ஊர்வலத்தில் சேர்த்திருந்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது ஜெர்மனிக்கு ஒரு நாள் வருகை மேற்கொள்ளவிருக்கும் புஷ்ஷைப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டுமே என்பதில் தான் பாதுகாப்பு அதிகாரிகள் குறியாக இருக்கின்றார்கள். தொலைக்காட்சி&lt;br /&gt;செய்தியில், ஒரு அதிகாரி குறிப்பிடும் போது, "கிளிண்டண், கோர்பாஷொவ், போப், ரீகன், ஷீராக் என் பல முக்கியஸ்தர்களை வரவேற்றிருக்கின்றோம். ஆனால் இப்போது புஷ்ஷை பாதுகாப்போடு வரவேற்பது தான் எங்களுக்கு வந்திருக்கும் மிகப் பெரிய சவால்" என்று குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;23ம் தேதி ப்ராங்பெர்ட்டின் ஒரு பகுதி நெடுஞ்சாலை புஷ் வருகைக்காக மூடப்படவிருக்கின்றது. மிக அழகிய நகரமான மைன்ஸ் நகரைக் கடந்து ரைன் நதிக்கரை ஓரத்தில் இருக்கும் குர்பூர்ஸ்லிஷஸ் அரண்மனையில் புஷ் அரசியல் பிரமுகர்&lt;br /&gt;களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.mainz.de/C1256D6E003D3E93/webimages/schloss_heute_g.jpg/$File/schloss_heute_g.jpg" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;அருகாமையில் உள்ள சில பள்ளிகளுக்கும் அன்று விடுமுறையாம்.  இப்படி ஏகப்பட்ட ஏற்பாடுகள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110863446498717393?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110863446498717393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110863446498717393' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110863446498717393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110863446498717393'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/02/vip.html' title='ஜெர்மனிக்கு வருகை தரவிருக்கும் VIP'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110760270145653685</id><published>2005-02-05T12:08:00.000+01:00</published><updated>2005-02-05T12:43:28.770+01:00</updated><title type='text'>மூன்ஷனில் 4 நாள் சுற்றுலா </title><content type='html'>Travelog - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ]&lt;br /&gt;&lt;img src="http://www.muenchen.de/vip8/prod1/mde/_de/rubriken/Rathaus/65_raw/fremdverkehr/img/3_Bild_Panorama_6.jpg"&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பக்கத்தில் எனது பயணக் கட்டுரைகளை எழுதி நெடுநாட்களாகி விட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எதிர் பாராத விதமாக உள்நாட்டிலேயே சிறிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அன்றாட அலுவலக வேலைகள், அலைச்சல்கள்,&lt;br /&gt;இவைகளுக்கு மத்தியில் 4 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பாயர்னில்(Bayern) உள்ள மூன்ஷன் (Muenchen) நகரத்திற்கு கடந்த வாரம் சென்று வந்திருந்தேன். பொதுவாகவே விண்டர் குளிரில் நான் அதிகமாக ஜெர்மனியில் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிப்பது அரிது. பெரும்பாலும் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவதே வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில் இந்த முறை இந்த சிறிய திடீர் பயணம் சற்று வித்தியாசமாகவே அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.germany-tourism.co.uk/media/bavariagermanymap.gif"&gt;&lt;br&gt;&lt;br /&gt;என் நண்பன் பீட்டரின் சகோதரி ரெஜினாவின் குடும்பத்தினர் மூன்ஷனில் இருக்கின்றனர். அவர்களோடு சேர்ந்து மூன்ஷனைச் சுற்றிப்பார்க்க முடிவு செய்திருந்தேன். ஸ்டுட்கார்ட்(Stuttgart) நகரத்திலிருந்து மூன்ஷன் நகரை காரில் சென்று அடைவதற்கு இரண்டரை மணி நேரம் போதும். கார் மட்டுமின்றி இரயில் வழியாகவும் மற்றும் விமானம் வழியாகவும் இந்த நகரை அடைய முடியும். பவேரியன் நகரமான இந்த நகரம் தெற்கு ஜெர்மனியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த நகரின் சிறப்பு அம்சங்கள் இங்கு தயாரிக்கப்படும் பியர்களும், பழமையையும் நாகரிக வளர்ச்சியையும் காட்டும் பிரமாண்டமான கட்டிடங்களும், இயற்கை அழகுமாகும். இந்த நகரின் சிறப்பைக் கூறும் பிரமாண்டமான தொல்பொருள் ஆய்வு கூடங்களும் இங்கு அமைந்திருக்கின்றன. இதற்கும் மேலாக பவேரியா ஆல்ப்ஸ் (Baverian Alps) மலைத்தொடரின் வாயிலாக அமைந்திருப்பதால், குளிர்கால விளையாட்டு&lt;br /&gt;க்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் இந்த நகரம் விளங்குகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்ஷன் நகரம் 1158ம் ஆண்டில் ஐசார் நதிக்கரையில்(River Isar) உருவாக்கப்பட்டது. மூன்ஷன் என்னும் பெயர் துறவிகளின் இல்லம் என்பதைக் குறிப்பது. துறவிகள் தான் இங்கு பியர் தயாரிக்கும் துறையை வளார்த்ததாக இந்நகரைப் பற்றி விளக்கும் கையேடுகள் கூறுகின்றன. இப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் தொடக்கி வைத்த இந்த தொழில் இன்று இந்த நகரின் புகழை உலகம் முழுவதும் பரவியிருக்கச் செய்துள்ளது. 1810ம் ஆண்டில் தான் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நகரில் நடைபெறும் அக்டோ பர் திருவிழா(October Fest) ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகெங்கிலுமிருந்து 6 மில்லியன் மக்கள் இங்கு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் லிட்டர் பியர்கள் பயன்படுத்தப்படுவதாக (விற்று முடிவதாக) மூன்ஷன் நகர&lt;br /&gt;வலைப்பக்கம் ( http://www.munich.de )தெரிவிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நகருக்கு நான் இரண்டு முறை ஏற்கனவே அலுவலக வேலை விஷயமாக வந்திருந்தாலும், இம்முறை விடுமுறை என்பதால் சுதந்திரமாக இங்குள்ள பிரசித்திபெற்ற முக்கிய இடங்களைச் சுற்றி வர முடிந்தது. குளிர் காலம் என்றாலும் இங்கிருந்த நான்கு&lt;br /&gt;நாட்களுமே ஏறக்குறைய 6லிருந்து 11 டிகிரி வரை சீதோஷ்ணம் இருந்ததால் வெளியில் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு சிரமமாக இல்லை. மேக மூட்டமின்றி சூரிய வெளிச்சம் நிறைந்திருந்ததால், சந்தோஷமாக நகர் வலம் வரமுடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்ஷனில் பல முக்கிய இடங்கள் இருந்தாலும், முதலில் எங்கள் பட்டியலில் இருந்தது இங்குள்ள அழகிய பூங்காவான இங்லீஸ்ஷ் கார்டன் தான். அதனை பார்த்து ரசிக்க மதியம் நான் பீட்டர், ரெஜினா மற்றும் அவள் கணவர் வால்டர் கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்ஷன் நகர மத்தியிலேயே அமைந்திருக்கும் பெரிய பூங்கா இந்த இங்லீஷ் கார்டன். சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பசேலென்று அமைந்திருக்கும் இந்த பூங்கா அதன் தனித்துவத்தால் வருவோரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இங்குள்ள சீனக் கோபுரம், ஏரி, அதில் அழகாக மிதந்து வரும் அன்னப்பறவைகள், விதம் விதமான வாத்துக்கள் போன்றவை இந்த பூங்காவின் அழகை மேலும் ரசிக்க வைக்கின்றன. கோடை காலத்தில் இந்த பூங்காவிற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சம் ஒன்றும் இருக்கின்றது. இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் கோடையில் நிர்வாண சூரியக் குளியல் செய்வதற்காக மக்கள் கூடுவதும் வழக்கம். நகரின் மையப் பகுதியான ஓடன்ப்லாட்ஸ் பகுதியிலிருந்து மூன்ஷன் நகர தெற்கு எல்லை வரை இந்த பூங்கா நீண்டு அமைந்திருக்கின்றது. செல்ல செல்ல இந்த பூங்கா விரிவாகிக் கொண்டே வருகின்றது; மாலைப் பொழுதை இயற்கையோடு கலந்து அனுபவிப்பதற்கு சிறந்த இடம் இந்தப் பூங்கா. மற்றொரு விஷேஷம் என்னவென்றால் ஐரோப்பாவின் மிகப் பெரிய பூங்கா இந்த இங்லீஷ் கார்டன் தான்.&lt;br /&gt;&lt;img src="http://www.subaonline.de/blogpic/eng_gard.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய நகரான இந்த மூன்ஷனில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆசியாவின் கலை நுனுக்கத்தை எடுத்துக் காட்டும் குறிப்பிடத்தக்க ஒரு இடமும் இருக்கின்றது. "Haus der Kunst" என்றழைக்கப்படும் கலைக்கூடத்தின் பக்கத்தில் அழகான ஒரு ஜப்பானிய உணவகம் அமைந்துள்ளது. Mitsuo Normura என்ற ஜப்பானியர் ஒருவர் தான் இந்த உணவகத்தை ஒலிம்பிக் விநளயாட்டு இந்த நகரில் 1972ல் நடந்த பொழுது கட்டினாராம். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாதத்தின் 2ம் மற்றும் 4ம் வார இறுதி நாட்களில் மதியம் 3லிருந்து 5 வரை தேநீர் அருந்தும் வைபவம் இங்கு நடைபெறுமாம். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது என்ன விஷயம் என்பது தெரியவில்லை. இந்த உணவகத்திற்குப் பக்கத்திலேயே அமைந்திருக்கின்றது கண்ணைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒரு சீன கோபுரம். மூன்ஷன் நகரத்திலேயே பிரபலமாக&lt;br /&gt;wildest beer garden in Munich என அழைக்கப்படும் பகுதி இது. கோடை காலத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம் நாங்கள் சென்றிருந்த அந்த மாலை வேளையில் விண்டர் குளிர் காரணத்தால் ஆட்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. கோடைகாலத்தில் பெரும்பாலும் சூரிய வெளிச்சம் இரவு 10 மணி வரை இருக்கும்; அப்போது இந்த திறந்த மண்டபமான இந்த சீன கோபுரத்தில் மட்டும் 7000 பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகளை அமைத்திருப்பார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத் தாண்டி வரும் வழியில் பழங்கால அரசவை மண்டபங்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் மோனோபெறோஸ் மண்டபம் அமைந்திருக்கின்றது. இதன் மேலே சென்று பார்த்தால் மூன்ஷன் நகரத்தின் பெரும்பாலான முக்கிய நினைவுச் சின்னங்களையெல்லாம் பார்த்து விட முடிகின்றது. இந்த மண்டபம் இசை பிரியர்களுக்கு உகந்த இடம் போலத் தெரிகின்றது. பல இனத்தைச் சார்ந்த மக்களும் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு (தரையில் சிறிய பெட்டி அல்லது தொப்பியை வைத்து விடுகிறார்கள், காசுக்காகத்தான்) வருவோரை இசையால் மகிழ்விக்கின்றனர். இந்திய உருவச் சாயலுடன் ஒருவர் ஹார்மோனியம் போன்ற ஒரு இசைக் கருவியை கையில் ஏந்தியவாறு வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அங்கிருந்த சமயத்தில், மண்டபத்தின் நுழைவாயிலுக்குச் சற்று தள்ளி ஜெர்மானியர் ஒருவர் புல்லாங்குழல் போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை பார்த்த திருப்தியுடனும், நடந்த களைப்பினாலும், பசியோடு அங்கிருந்த ஒரு ஜெர்மானிய பாரம்பரிய உணவு விடுதியில் இரவு/மாலை உணவுக்காக நுழைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியில் செல்லுமிடமெல்லாம் விதம் விதமான உணவு வகைகள் கிடைப்பதுண்டு. அதிலும் சைவ உணவு வகைகளுக்கு கொஞ்சமும் பிரச்சனையேயில்லை. அதற்காக தோசை இட்லி சாம்பாரெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்றாக உருளைக் கிழங்கிலும் பச்சை காய்கறிகளிலும் தங்கள் கை வரிசையைக் காட்டுபவர்கள் ஜெர்மானியர்கள். நான் இருக்கின்ற போப்லிங்கன் நகரம் பாடன் உர்ட்டெம்பெர்க் எனும் மாநிலத்தைச் சார்ந்தது. எப்படி இந்தியாவில் தமிழகத்திற்கு, கேரளாவிற்கு, ஆந்திராவிற்கு என்று தனித்தனியாக அதன் சிறப்பைக் காட்டும் உணவு வகைகள் இருக்கின்றதோ அதேபோல&lt;br /&gt;ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஷ்பெஷல் உணவு வகை உண்டு. உணவு வகைகளில் சிறந்ததாக இந்த பாடன் உர்ட்டெம்பெர்க் மற்றும் முன்ஷன் நகரம் இருக்கும் பாயர்ன் மாநிலமும் கருதப்படுகின்றன. இதில் என்ன வித்தியாசம் என்றால், பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் இத்தாலிய சைவ உணவுகளோடு இந்த மாநிலத்திற்கே உரிய தனித்துவத்தைக் காட்டும் பல சைவ உணவு வகைகளையும் எல்லா உணவு விடுதிகளிலும் பெற்று விட முடியும். ஆனால் பாயர்ன் மாநிலம் அசைவப் பிரியர்களுக்கு அதிகமான வகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.&lt;br /&gt;&lt;img src="http://www.germany-tourism.co.uk/media/05_culinary_fishbasket.jpg"&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொரித்த பன்றி இறைச்சி, கொஞ்சம் பச்சை காய்கறிகள், மற்றும் உள்நாட்டு பியர் இங்கு மிகப் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதோடு சால்மன் மீன், வைன், இவற்றோடு காய்கறிகள் கொண்ட ஒரு வகை உணவும் உண்டு. பன்றி மாடு, கோழி, வான்கோழி இறைச்சி வகைகளில் பல வகையான உணவுகளை இங்குள்ள உணவகங்கள் வழங்குகின்றன. மீன் வகைகள் ஷ்பெஷல் உணவு என்று தான் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாயர்ன் மாநிலத்தின் புகழ் கூறும் மற்றொரு உணவு வகை ப்ரெட்ஸல் என அழைக்கப்படும் ஒரு வகை ரொட்டி. இது இந்த மாநிலத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜெர்மானியர்கள் கூறுகின்றார்கள். ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் இந்த வகை ரொட்டி கிடைத்தாலும், இதன் மிகச் சுவையான இந்த ரொட்டியை பாயர்னிலும் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் தான் பெற முடியும். முதன் முதலில் இந்த ரொட்டியைச் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் காட்டுவதால் இது பிடிக்காமல் போய்விடக் கூடும். ஆனால் பழகி விட்டால் ப்ரெட்ஸல் இல்லாமல் காலை உணவே இல்லை என சொல்லும் அளவிற்கு பழகி விடுவோம். இந்த ரொட்டியில் உள்ள சிறப்பு அதன் மேலே பூசப்படும் ஒரு விதமான பொருள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.food-from-bavaria.de/spezialitaeten/images/datenbank/produktbilder/prodbild_23.jpg"&gt; &lt;br /&gt;இதன் சுவை கொஞ்சம் துவர்ப்பாகவும் இருக்கும். ரொட்டியின் மேல் உப்புத் துகள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பட்டர் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவையே தனிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதரணமாக சிறிய அளவில் ஜெர்மனி முழுதும் கிடைக்கக்கூடிய இந்த ப்ரெட்ஸல், அக்டோபர் மாதம் மட்டும் மூன்ஷன் நகரில் ஒரு பெரிய பீஸா அளவிற்கு கடைகளில் கிடைக்கும். இந்த பெரிய ப்ரெட்ஸலை ஒருவரால் நிச்சயமாக சாப்பிட்டு முடிக்க&lt;br /&gt;முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்ஷன் வந்திருப்பதால் இந்த நகரத்தின் ஸ்பெஷல் தான் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து மெனு அட்டையில் எனக்குப் பிடித்த உணவைத் தேடினேன். ஒரு சைவ உணவு அகப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் எனது உணவு வந்து சேர்ந்தது.&lt;br /&gt;பெரிய அளவிலான ஒரு உருளைக் கிழங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு வேகவைத்து வருக்கப்பட்டு அதோடு காய்கறிகளை சோயா சோஸ் சேர்ந்து மெலிதாக வருத்து வைத்திருந்தார்கள். உணவை சுவைக்க ஆரம்பித்தோம். சுவை பிரமாதமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை காலையிலேயே ப்ரெட்ஸல் சகிதமாக காலை உணவை முடித்து நாங்கள் மூன்ஷன் நகரின் புறநகர் பகுதியான அம்மர்சீ ஏரிப் பகுதிக்கு புறப்பட்டோ ம். மூன்ஷன் மையப்பகுதியிலிருந்து விரைவு இரயிலில் இந்த இடத்தை 45 நிமிடத்தில்&lt;br /&gt;அடைந்து விடமுடியும். அம்மர்சீ அதன் இயற்கை அழகுக்கு மாத்திரம் புகழ் பெற்ற ஒன்றில்லை. sailing பயிற்சி பள்ளிகள் பல இங்கு இருக்கின்றன. இங்குதான் ஜெர்மனியில் மிகப் பழமையான sailing பள்ளி இருக்கின்றது. இந்த ஏரியை சாதாரணமாக&lt;br /&gt;எடை போட்டு விட முடியாது. கடலைப் பார்ப்பது போல நீண்டு பரவி இருக்கின்றது அம்மர்சீ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.muenchen.de/vip8/prod1/mde/resources/images/Englische_Version/Gemischte_Bilder/Bilder/T1_BU_SeeBootehell.jpg"&gt;&lt;br /&gt;அம்மர்சீக்கு அருகாமையில் மலையுச்சியில் மிகப்பழமை வாய்ந்த பாரோக் வடிவமைப்பிலான ஒரு தேவாலயம் இருக்கின்றது. ஜெர்மனியில் இருக்கின்ற திருத்தல யாத்திரைப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. (ஹிந்து சமயத்தில் உள்ளது&lt;br /&gt;போன்றே ஜெர்மனியிலும் தீர்த்த யாத்திரை செய்யும் பழக்கம் வழக்கத்தில் இருக்கின்றது. இதனை பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிட முயற்சிக்கிறேன்) இந்த தேவாலயத்தை அடைவதற்கு மலையை நோக்கி ஏறக்குறைய 1மணி நேரமாவது நடக்க வேண்டும். வழியில் பற்பல முக்கிய இடங்களும் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் நடுவழியில் இருக்கின்ற தேவாலய குருமார்களின் மடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பழமை வாய்ந்த கட்டிடம்; மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கின்றது. முன்பெல்லாம் குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்களை மட்டுமே கவர்ந்து வந்த இந்த மலைப் பிரதேசம் இப்போது ஹைக்கிங்&lt;br /&gt;செய்பவர்களுக்குப் பிடித்த பகுதியாக விளங்குகின்றது. ஏரிக்கரையில் நீந்திக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்த வாத்துக்களை பார்த்துக் கொண்டே மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மலைப்பிரதேசத்தில் இந்த குளிர் காலத்தில் நடப்பது சுலபமான ஒரு விஷயமல்ல என்பதை நடக்க நடக்க தெரிந்து கொண்டேன். காய்ந்த சருகுகள் தரையெல்லாம் கொட்டிக் கிடப்பதாலும் சில நாட்களுக்கு முன் பெய்த பணி இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருந்ததாலும் பாதை சில நேரங்களில் வழுக்கிக் கொண்டேயிருந்தது. கொஞ்சம் கவனம் குறைந்தாலும் கீழே விழுந்து விடுவோம். இந்த பயம் இருந்தாலும் மலையின் இயற்கை அழகு மனதை கொள்ளை கொள்வதாகவே இருந்தது. இப்படியே நடந்து குருமார்களின் மடத்தைக் கடந்து ஒரு வழியாக மலையுச்சியில் இருக்கும் தேவாலயத்தை அடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.subaonline.de/blogpic/church1.jpg"&gt;&lt;br /&gt;அளவில் கொஞ்சம் சிறியதாக இருந்தாலும், தேவாலயத்தின் உட்புறம் மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் இருந்தாலும் நிசப்தமாக தியான சிந்தையை தூண்டும் வகையில் அமைதியாக இருந்தது. தேவாலயம் தூய்மையாக பாதுகாக்கப்படுகின்றது. இதனைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருக்கும் நமது பழமை வாய்ந்த ஆலயங்களும் இப்படி தூய்மையாக, அமைதி நிலவும் வகையில் பாதுக்காக்கப்பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டே இல்லம் திரும்பினேன். மறுநாள் மூன்ஷனில் பார்க்க வேண்டிய இடங்களை பட்டியல் போட்டோம். இந்த நாளும் இனிமையாக முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1972ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்ஷன் நகரத்தில் நடைபெற்றது. அதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு மையத்தைக் காண காலையிலேயே நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டோம். இந்த ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் பக்கத்தில் தான் மூன்ஷனின் தொலைகாட்சி கோபுரம் இருக்கின்றது. முதலில் கோபுரத்திற்குச் சென்று பின்னர் விளையாட்டு மையத்தை பார்வையிடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.olympiapark-muenchen.de/uploads/pics/turm_spiegel1_01.jpg"&gt;&lt;br /&gt;தொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம்&lt;br /&gt;அருகாமையிலேயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தொலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.&lt;br /&gt;&lt;img src="http://www.olympiapark-muenchen.de/uploads/pics/1972_poster1_01.gif"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1972ல் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வோடு சேர்ந்தார்போல நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை பலரும் ஞாபகம் வைத்திருக்கக் கூடும். ஆகஸ்டு 26ம் நாள் தொடங்கப்பட்ட விளையாட்டுக்கள் சீராக 10 நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 5ம் தேதி காலையில் 8 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்களுக்காக அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் புகுந்து 2 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்று விட்டு மேலும் 9 பேரை பிணையாக பிடித்துக் கொண்டு சென்று பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒலிம்பிக் விளையாட்டு உடனே நிறுத்தப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானப் பகுதி தற்போது உலகளாவிய அளவில் பல நிகழ்வுகள் நடத்துவதற்காகப் பயன்படுகின்றது. ஓய்வு நேர கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர்கள் பலர் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி&lt;br /&gt;என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffff66;"&gt;(எனது http://subaonline.blogdrive.com வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனை இந்த பகுதியில் மீண்டும் சில மாற்றாங்களுடன் பதிப்பிக்கின்றேன்.)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110760270145653685?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110760270145653685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110760270145653685' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110760270145653685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110760270145653685'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/02/4.html' title='மூன்ஷனில் 4 நாள் சுற்றுலா '/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110727932212031379</id><published>2005-02-01T18:32:00.000+01:00</published><updated>2005-02-01T18:46:23.570+01:00</updated><title type='text'>தேசிய காற்பந்து விளையாட்டு ஊழல்</title><content type='html'>தமிழகத்தில் எப்படி கொலை செய்திகள் தற்பொழுது தொலைகாட்சிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனவோ அதே போல உள்நாட்டு ஜெர்மானிய தொலைகாட்சி செய்தி நிறுவனங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்து விட்டது தற்போதைய காற்பந்தாட்ட ஊழல் விவகாரம். காற்பந்து விளையாட்டு என்பது ஜெர்மானியர்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். அதிலும் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தேசிய காற்பந்தாட்ட போட்டி (Bundesliga) என்பது எல்லா தரப்பு மக்களிடையேயும் பெருத்த வரவேற்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வு. அடுத்த ஆண்டு உலகப் பந்தயத்தை ஏற்று நடத்தவிருக்கும் ஜெர்மனி தனது இளம் காற்பந்து வீரர்களையும் மக்களுக்கு இந்த போட்டியின் வழி அறிமுகப்படுத்துகின்றது என்றே சொல்லலாம். தமிழகத்தில் ரஜினிகாந்த் விஜய் போன்றவர்களுக்கு இருப்பது போன்ற வரவேற்பு இங்கு ஓலிவர் கான், மிஷயல் பாலாக், குரானி போன்றவர்களுக்கு இருக்கின்றது என்றால் எந்த அளவுக்கு மக்கள் இந்த விளையாட்டின் மேல் பற்று வைத்திருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தற்போது வெளியாகி பரபரப்பாகி இருக்கும் விஷயம் இந்த தேசிய காற்பந்து விளையாட்டில் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் விஷயம். கடந்த வார ஆரம்பத்தில் பெரும் அளவில் லஞ்சம் வாங்கிய விளையாட்டு வீரர்கள், மற்றும் ரெப்ரி ஆகியோரின் பெயர்களை காவல்துறை வெளியிட்டது. இவர்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அனைவரும் தகுந்த தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காற்பந்து ஊழலை துருவி ஆராய்ந்து வரும் காவல்துறையினர், இதில் ஐரோப்பிய அளவில் மாபியா தொடர்புடைய ஊழல் திட்டங்கள் இருக்கும் என்று நம்புகின்றனர். பெரும் அளவில் பணத்தை வாரிக் குவிக்கக்கூடிய காற்பந்து விளையாட்டில் இம்மாதிரியான அநாகரிகமான விஷயங்கள் எப்படியோ புகுந்து விடுகின்றன. ஜெர்மனியைப் பொறுத்தவரை இம்மாதிரியான விஷயம் நடப்பது இது இரண்டாவது முறை. 34 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற பந்தயம் நிர்மானிக்கும் ஊழல் ஜெர்மனியை கலக்கியது. புகழ்பெற்ற பீலபெல்ட் நகர குழு அப்போது இந்த "நல்ல" செயலைச் செய்து பெறும் புகழ் பெற்றது. இப்போது பாடர்போன் குழு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.dw-world.de/dw/image/0,1587,1474173_10,00.jpg"&gt;&lt;br&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைத் தொடர்ந்தால் காற்பந்தாட்ட வீரர்கள் மேல் பொது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் என்பது உண்மை. அதிலும் அடுத்த ஆண்டு உலகக் காற்பந்தாட்ட விளையாட்டு நடக்க இருக்கும் வேளையில் உலகம் முழுதும் ஜெர்மனியை நோக்க ஆர்ம்பிக்கும் போது ஜெர்மானிய காற்பந்து விளையாட்டு வீரர்கள் கட்டுப்பாட்டை மேற்கொண்டு நல்ல பெயரை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110727932212031379?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110727932212031379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110727932212031379' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110727932212031379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110727932212031379'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/02/blog-post.html' title='தேசிய காற்பந்து விளையாட்டு ஊழல்'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10499178.post-110707792395551601</id><published>2005-01-30T10:11:00.000+01:00</published><updated>2005-01-30T12:07:17.563+01:00</updated><title type='text'>புதிய அனுபவம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இது வரை ஒரு உணவகத்தில் வேலை செய்த அனுபவம் என்பது எனக்கு இல்லை. அந்த குறையும் நேற்று நிவர்த்தியாகிவிட்டது. எனது அலுவலக நண்பன் பொழுதுபோக்கிற்காக ஒரு இசைக்குழுவில் இருக்கின்றான். அருமையாக கித்தார் வாசிப்பவன். எனக்கும் இசையில் விருப்பம் இருப்பது தெரிந்த அவன் அவனுடைய இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு என்னை அழைத்திருந்தான். நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஒரு இரவு உணவு விடுதி. ஜெர்மானிய பாரம்பரிய அம்சங்களோடு, அதாவது பியர், பியர், பியர் என விதம் விதமான பானங்களையும் ஜெர்மானிய பாரம்பரிய உணவு விரும்பி சாப்பிடுவதற்காகவும் மக்கள் வருகின்ற ஒரு இடம் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்து கொண்டேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று விட்டேன். நண்பனின் இசைக்குழு உறுப்பினர்களில் சிலர் எனக்கு முன்னரே அறிமுகமானவர்கள் தான். அவர்களில் இங்கிலாந்துகாரர்கள் இருவர். இங்கேயே வேலை காரணமாக தங்கி வாழ்பவர்கள். இவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது குழுவின் மேனேஜர் பாவ்ல் என்னிடம் வந்து ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார். நிகழ்ச்சிக்கான கட்டணத்தை வசூலிக்கும் பெண் திடீரென்று வர முடியாத காரணத்தால் அவர்களுக்கு உதவி தேவைப் படவே அவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்னிடம் உதவி கேட்டு வந்து விட்டனர். எனக்கு மனதிற்குள் கொஞ்சம் பயம் என்றாலும், சரி பார்ப்போமே என்று ஒத்துக் கொண்டுவிட்டேன். இசைக் குழுவினர் அனைவருக்கும் நான் ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வேலை ரொம்ப சுலபம். டிக்கட்டுக்கான பணத்தை வாங்கிவிட்டு புத்தகத்தில் கோட்டிட்டுக் குறித்துக் கொள்ள வேண்டும். பணம் கொடுத்தவர்களின் கையில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விட வேண்டும். இவ்வளவு தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பிக்க வேலையைத் தொடங்கி விட்டேன். உணவகம் முழுதும் மக்கள் கூட்டம். நல்ல வருமானம் இசைக் குழுவினருக்கும். வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போதே காபி, தண்ணீர், French Fries, Potato Puree, Salad என எனக்கான உணவு மேசைக்கு வந்து கொண்டே இருந்தது. Jazz இசையை ரசித்துக் கொண்டும் உணவை சுவைத்துக் கொண்டும் வேலையைப் பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. இப்படி உட்கார வைத்து சாப்பாடு போடுகின்றார்களே என்று நினைத்த போது இந்த வருடம் பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொள்ளவில்லையே என்ற கவலையும் நீங்கியது. &lt;/span&gt;&lt;span style="color:#993399;"&gt;&lt;span style="font-size:85%;color:#ffff99;"&gt;(எங்கள் ஊர் தைப்பூசத்தில் தண்ணீர் மலைக் கோவில் முருகனுக்கு காவடி எடுப்பது மாத்திரம் பிரபலம் அல்ல. அங்கு கட்டியிருக்கும் தண்ணீர் பந்தல்களில் மக்களை வரவேற்று உபசரித்து உணவு வழங்குவார்களே அது தான் ரொம்ப ரொம்ப பிரபலம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10499178-110707792395551601?l=subahome.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://subahome.blogspot.com/feeds/110707792395551601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10499178&amp;postID=110707792395551601' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110707792395551601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10499178/posts/default/110707792395551601'/><link rel='alternate' type='text/html' href='http://subahome.blogspot.com/2005/01/blog-post.html' title='புதிய அனுபவம்'/><author><name>Suba</name><uri>http://www.blogger.com/profile/15550514424736433144</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://www.subaonline.de/album/ssl.jpg'/></author><thr:total>5</thr:total></entry></feed>
